பக்கம் எண் :

மனோன்மணீயம்
41

குடில,ஐய மதற்கென்? ஐய ! என்னுடல்
190.ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும்
நினதே யன்றோ ! உனதே வலுக்கியான்
இசையா தொழிவனோ ! வசையறு புதல்வன்
பாலியன் மிகவும். காரியம் பெரிது.

ஜீவ,பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம்
195.விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில்,
நலமா யுரைப்பன் நம்பல தேவன்.
வருத்த மிவையெலாங் கருத்தி லுணராது
உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே
யோசனை யின்றி நடேசனை யேவில்
200.நன்றாய் முடிப்பனிம் மன்றல்
என்றார். அவர்கருத் திருந்த வாறே !

12


குடில,குற்றமோ அதுவுங் கொற்றவ ! முனிவர்
அறிந்ததவ் வளவே யாகும். ஏழை !
துறந்தா ரறிவரோ தூதின் தன்மை?
205.இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும்
எல்லா மில்லை ; ஆதலா லெவருங்
கட்டுக கோவில், வெட்டுக ஏரி,
என்று திரிதரு மிவர்களோ நமது
நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்?
210.இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும்
நீ்ச்சே யன்றி நிலையோ? நடேசன் !
யோசனை நன்று ! நடேசன் ! ஆ ! ஆ !
ஏதோ விவ்வயிற் சூதாப் பேதையர்
உள்ளம் மெள்ள வுண்டு மற்றவர்
215.அம்மை யப்பரை யணுகா தகன்று
தம்மையும் மறந்தே தலைதடு மாறச்
செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால்.
ஐயமொன் றில்லை. அதனான் மொய்குழல்
மாதர்பாற் றூதுசெல் வல்லமை கூடும்.
220.பித்த னெப்படிச் சுந்தரர்க்கு
ஒத்த தோழனா யுற்றனன் ! வியப்பே !

13