பக்கம் எண் :

மனோன்மணீயம்
42

ஜீவ,முனிவரும் வரவர மதியிழந் தனரே.
இருக்கும். இருக்கும். இணையறு குடில !
பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி
225.விடுத்திடு தூது விரைந்து.
கால விளம்பனஞ் சாலவுந் தீதே.

14


குடில,ஈதோ அனுப்பினேன். இன்றிம் மாலையில்
தூது செல்வான் றொழுதுன் னநுமதி
பெறவரு வான்நீ காண்டி.
230.இறைவ ! மங்கல மென்றுமுன் னடிக்கே !

15

(குடிலன் போக)


ஜீவ, (தனதுள்)நல்லது ! ஆ ! ஆ ! நமது பாக்கியம்
அல்லவோ விவனைநா மமைச்சனாய்ப் பெற்றதும்?
என்னே ! இவன்மதி முன்னிற் பவையெவை?

(சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க)


(பிரபுக்களை நோக்கி)வம்மின். வம்மின். வந்து சிறிது,
235.கால மானது போலும். நமது
மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு
இருந்தோ மிதுவரை. குடிலன் மிகவும்
அருந்திறற் சூழ்ச்சியன்.

முதற் பிரபு.

அதற்கெ னையம்?

சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி
240.இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர்.
எல்லை யுளதோ விவன்மதிக் கிறைவ !
வல்லவன் யாதிலும்.

நாராயணன். (தனதுள்)

நல்லது கருதான்.

வல்லமை யென்பயன் !

2-ம் பிரபு.

மன்னவ! அதிலும்

உன்றெல் குலத்தி லுன்றிரு மேனியில்
245.வைத்த பரிவும் பத்தியு மெத்தனை !
குடிலனும் குடிக்கே யடிமை பூண்ட
ஆஞ்ச னேயனோ வறியேம் !