| நாரா, (தனதுள்) | | முழுப்பொய். | | | வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே ! |
| சேவகன். | | கொற்றவ ! | | 250. | நேற்று மாலையி னின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுக நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. |
| நாரா, (தனதுள்) | | எதுவோ பொல்லாங் கெண்ணினன். திண்ணம். |
| ஜீவ, | 255. | பார்மின், பார்மின். நம்மிசை வைத்த ஆர்வமு மன்பும். ஆ ! ஆ ! |
| நாரா, (தனதுள்) | | யாதும் | | | பேசா திருக்கி லேசுமே நம்மனம். குறியாற் கூறுவம். அறிகி லறிக. | | | (நாராயணன் செல்ல) |
| 3 - ம் பிரபு. | | சாட்சியு மோகண் காட்சியா மிதற்கும்! | | 260. | அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன் வீரவா கிவர்முதற் போற்றிய வெத்திறத் தவரு மிறைவ ! இவனுக் | | 265. | கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? | | | (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்து வர) |
| ஜீவ, (நாராயணனை நோக்கி) | | ஏ ! ஏ ! நாரணா கரியா யுன்மூக் | | | கிருந்தவா றென்னே? ஏ ! ஏ ! இதுவென் ! |
| நாரா, | | மூக்கிற் காயி ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் | | 270. | உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? |
| ஜீவ, | | ஓகோ ! ஓகோ ! உனக்கென் பைத்தியம் ! |
| யாவரும். | | ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! | | | (யாவரும் நகைக்க) |
|
|
|