பக்கம் எண் :

மனோன்மணீயம்
44

ஜீவ, (பிரபுக்களை நோக்கி)நாரணா ! நீயும் நடேசன் றோழனே.
நல்லது ; விசேடமொன் றில்லை போலும்.

முதற் பிரபு.275.இல்லையெம் மிறைவ ! எல்லாப் புவியுநின்
வாகுவே தாங்க ! மங்கலம் வரவே !

(பிரபுக்கள் போக)


ஜீவ,நாரா யணா ! உனக் கேனிப் பித்து?
தீரா விடும்பையே தெளிவி லையுறல்.

நாரா,எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை
280.கோடிய மாந்தர் கோடியின் மேலாம்.

ஜீவ,எதற்குந் திருக்குற ளிடந்தரும் ! விடுவிடு.
விரும்பி யெவருந் தின்னுங்
கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.

16

(அரசனும் சேவகர்களும் போக)


நாரா, (தனிமொழி)ஐயோ ! இதற்கென் செய்வன் ! அரசன்,
285.உறுதியா நம்பினன். சிறிதும் பிறழான்.
வெளுத்த தெல்லாம் பாலெனு மெய்ம்மை
யுளத்தான். களங்க மோரான். குடிலனோ
சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான்
ஓதுவ வுன்னுவ செய்குவ யாவுந்
290.தன்னயங் கருதி யன்றி மன்னனைச்
சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா
நல்லவன் போலவே நடிப்பான். பொல்லா
வஞ்சகன். மன்ன னருகுளோ ரதனை
நெஞ்சிலு நினையார். நினையினு முரையார்.
295.இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர்
வடித்து வடித்து மாற்றொலி போன்றே.
தடுத்து மெய்ம்மை சாற்றுவர் யாரே?
என்னே யரசர் தன்மை ! மன்னுயிர்க்
காக்கமு மழிவு மவர்தங் கடைக்கண்
300.நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப்
பெற்றார் ; பெற்றவப் பெருமையின் பராம்