| | உற்றுநோக் குவரே லுடன்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமு மன்றோ? |
| 305. | விழிப்பா யிருக்கிற் பிழைப்பர். விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வரலாற் றேளும் வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை யாய்ந்தா ராய்ந்து |
| 310. | பாரா ராளும் பாரென் படாவே? யாரை யானோவ ! அதிலுங் கொடுமை ! அரசர்க் கமைச்ச ரவயவம் அலரோ? உறுப்புகள் தாமே யுயிரினை யுண்ண வொருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் |
| 315. | மறந்து மன்னுயிர்ச் சுகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ விவனோ வமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யு மெய்யும் புலப்பட வுரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் |
| 320. | தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியா னெப்படிச் செப்புவன்? |
| 325. | நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய வுறுகண் நேரிடு மென்றென் னெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை ! |
| 330. | இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே. |
| | 17 |
| | (நாராயணன் போக) |