பக்கம் எண் :

மனோன்மணீயம்
46

இரண்டாம் அங்கம்.

2 - ம் களம்.

இடம் : ஊர்ப்புறத்து ஒருசார். காலம் : வைகறை.

நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க.

(இணைக்குறளாசிரியப்பா)

நடராஜன், (தனிமொழி)பரிதியி னுதயம் பார்க்கக் கருதில்
இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ்
செவ்விதிற் கண்டுபின் செல்வோம்.
ஓவியத் தொழில்வலோ னீவியக் கிழியில்
5.தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல,
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
வுருவுதோன் றாவண மொன்றாய்ச் செறிந்து
கருகிண் மயங்கிய காட்சி கழிந்து
10.சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே !
சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ்
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்
இருசிறை யடித்து நெடுவா யங்காந்து
15.ஒருமுறை கூவி யுழையுளார் புகழ
வுற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும்,
இருட்பகை யிரவி யிருளெனத் தம்மையுங்
கருதிக் காய்வனோ வென்றயிர்த் திருசிறைக்
கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி
20.மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம்
பதறியெத் திசையிலும் சிதறியோடு தலும்,
பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி
தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய்
அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை
25.அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில்