பக்கம் எண் :

மனோன்மணீயம்
47

இசையறி மாக்களின் ஈட்டம் போல
வசையறு பாடல் வழங்கலு மினிதே !
அதுவென் ! ஆஹா ! அலகா லடிக்கடி
ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக்
30.கதுவுஞ் காத லாணையிட் டறைந்து
பின்புசென் றோயா தன்புபா ராட்டும்
இவ்விரு குருகுங் காதலர்,
கண்டு மலர்நிலை காணார் போல்துகிர்த்
துண்டங் கொண்டு பாலைச் சொரிந்த
35.பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி
யுழையுழை யொதுங்கி யோடிப் போலிக்
கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே.
ஆடவர் காத லறைதலுந் தையலர்
கூடமாய்க் கொள்ளலு மியல்பே போலும்.
40.வாணீ ! மங்காய் ! வாழி நின்குணம் !
ஒருதின மிவ்வயி னுணையான் கண்டுழி
முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத்
தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு
வாங்கியும், மதியா தவள்போ லங்கே
45.யோடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச்
சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை.
ஏதியா னெண்ணுவ னோவென வுடனீ
கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும்.
அழுங்கலை வாணீ ! அறிவேன் ! அறிவேன் !
50.உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர்
வியர்த்தமே செய்கையும் மொழியும் -

(உற்றுச் செவி கொடுத்து)

“வாணி’’ என்றபேர் கேட்டனன் ! யாரது?
காணின் நன்றாம். காரிகை யார்கொல்?

(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலையில் வர)
சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து.

(ஆசிரியத்துறை)

நற்றாய்.நாணமு மென்மக ணன்னல மும்முகுத் துன்னை நம்பி
வீணில் விழைந்த இக்கேடவன் தன்னுடன் வீவுறுமே.