| | பேணிய என்குடிப் பேர்பெரி தாத லினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | நட, (தனதுள்) | 55. | ஐயோ ! இதுவென் ! கட்டம் ! கட்டம் ! |
(ஆசிரியத்துறை) | நற்றாய். | | நாணிக் கவிழ்த்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர்பொருள் கள்ளல மாதலி னால் வாணிக் குரித்தெனக் கேட்டபின் வௌவலம் வாரலையோ. |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | நட, (தனதுள்) | | நாராய ணன்அன் றுரைத்தது மெய்யே ! |
(ஆசிரியத்துறை) | நற்றாய். | | நாணமிலா மகள் சாவுக் கினிவெகு நாள்களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டு கொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலி னால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | நட, (தனதுள்) | | ஆயினு மித்தனை பாதகனோ விவன் ! |
| பலதேவன். | | எவருனக் குரைத்தா ரித்தனை பழங்கதை சவமவ ளெனக்கேன்? இவள்சுக மெங்கே? | | 60. | பொய்பொய் நம்பலை, ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ விரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக்குக் கொடு. | | 65. | வருகுவ னீதோ ! மறக்கன்மி னென்னை ! | | | (நற்றாய் போக. பலதேவனும் தோழனும் நடக்க.) |
| தோழன், | | செவ்விது ! செவ்விது ! இவ்விட மெத்தனை ! ஐந்தோ? ஆறோ? |
| பலதே. | | அறியேன். போ ! போ ! | | | இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். |
|