பக்கம் எண் :

மனோன்மணீயம்
49

தோழன்.வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு.

பலதே.70.வாணியாயினென்? மனோன்மணி யாயினென்?
அதைவிடப் படித்த வலகையா யினுமென்?
கணிசத் திற்கது. காரியத் திற்கிது.
வாவா போவோம். வழிபார்த் திருக்குஞ்
சேவக ராதியர் செய்குவ ரையம்.
75.எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு?
ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை.

(பலதேவனும் தோழனும் போக.)


நட,கொடுமை ! கொடுமை ! இக்கொடும்பா தகன்சொல்
கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின.
கைத்ததென் கண்ணுங் காதும்.
80.இத்தனை துட்டரு மிருப்பரோ வுலகில்?
ஐந்தோ ! ஆறோ ! அறியான் ! பாதகன் !
நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க.
மெய்ச்சுக மிதுவாம் ! விளம்புவ தென்னினி?
இச்சண் டாளனும் வாணியும் ! ஏற்கும் !
85.ஒருபிடி யாயவ னுயிரினை வாங்க
ஓடிய தெண்ணம். உறுத்தின தென்கை !
தீண்டவும் வேண்டுமோ தீயனை?
என்னிவ னனந்தைக் கேகுங் காரியம்?
யாருடன் வினவ? நாரணனோ வது?

(நாராயணன் வர)


90.வா வா, நாரணா !
நாராயணன்.

ஏ ! ஏ ! என்னை !

சினந்தனை தனியாய்?

நட,

என்இத் தீயவன்

அனந்தைக் கேகுங் காரணம்?

நாரா,

யார்? யார்?


நட,அறிவை ! நீவிளை யாடலை. அறைதி.

நாரா,வதுவை மனோன்மணி தனக்குவழங்கிட -

நட,95.அதுவும் நன்றே ! கெடுவனிவ் வரசன்!