| நாரா, | | அடுத்ததுவாணியின் மணமும், அறைந்துளேன் |
| நட, | | விடுத்திடல் வெண்ணம். தடுக்கயா னறிவன். விடுத்தனன் கண்டும். எரித்திடுவேன் நொடி. உறுதி யொன்றுளதேல் ! உரையாய் நடந்தவை. |
| நாரா, | 100. | முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவை யவ்வழியே யாற்றிட வாணியை அதட்டினன். |
| நாரா, | | ‘இறக்கினு மதற்கியா னிசையேன்’ என்றாள். |
| நட, | | அரைக்கண முன்ன மறிந்திலே னிம்மொழி. |
| நாரா, | 105. | என்னே யுன்மதி ! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுந்தாம். யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரி்துந் திடனே. | | 110. | புண்கொள் நெஞ்சொடு புலம்புகின்றாய் மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி | | 115. | யன்ன தவள்கருத் தாமோ? |
| நட, | | அறியாய் ! | | | புருடரே புலையர். நிலையிலாப் பதடிகள் இருளடை நெஞ்சினர். ஈரமி லுளத்தர். ஆணையு மவர்க்கொரு வீணுரை. அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் | | 120. | காதகர். கடையர். கல்வியில் கசடர். |
| நாரா, | | ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. |
| நட, | | திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி, |
|
|
|