| | கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. |
| 125. | தியக்கமு மயக்கமுஞ் செறிவ தரிவையர், உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளர். அவர்தம் முறுதிநீ யுணராய். |
| 130. | சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும் ; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலைதருங் கொடியவிவ் வலகைகள் வழியே. புருடரோ விவரும் ! கருவுறுங் குழவிமெய் |
| 135. | மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை. அன்போ அறியார். மணமு மவாக்கொரு வாணிகம் ! அந்தோ ! சீ ! சீ ! என்னித் தீயவர் செய்கை? மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை |
| 140. | ஆம்பெருங் கடலுட் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற வெண்ண மியக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி |
| 145. | அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய், பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாந் திசைதொறும் அலைந்து திரிந்து |
| 150. | கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் |
| 155. | அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் |