பக்கம் எண் :

மனோன்மணீயம்
52

மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது
அந்தோ ! தம்மெய் யரிவார் போலத்
160.தனியே தளருந் தமக்குத் துணையாய்
வருபவர் தமையும் பகைவரா நலிந்து
பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம்
மதிகே டென்னே ! துதிபெறு மன்புநற்
குணமு முளாரில் துணைவ ராயின்
165.இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர்
நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம்
பெற்றவா றன்றோ? எற்றே மடமை !
கேட்டிட வேட்டவை யாவையு மீயுங்
கற்பக தருவென வற்பமுங் கருதாது
170.அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக்
கரிபெற முயன்ற கம்மிய னேயென,
தனக்கென வாழுந் தனிமிரு கத்தின்
மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந்
துன்பமுந் தனதா அன்பு பாராட்ட,
175.மெள்ளமெள் ளத்தன் னுள்ளம் விரித்துப்
பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச்
சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத்
தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும்
ஓய்வுறச் செய்து,மற் றென்றாய் நின்ற
180.எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம்
முங்கி யதனுள் மூழ்கிட யாரையும்
பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ்
இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி,
உடற்றின வடக்குமா வுரைஞ்சிடு தடியென
185.மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங்
கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே !
நாரணா ! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந்
தீராத் துயரமே செய்வது, செல்குவன்.
ஏதா யினுமினி யெய்தில்,
190.ஓதாய் முனிவ ருறையு ளுற்றே.

1

(நடராஜன் போக)