பக்கம் எண் :

மனோன்மணீயம்
54

இரண்டாம் அங்கம்

3 - வது களம்

இடம் : திருவனந்தையிற் சேரனரண்மனை. காலம் : காலை.
புருடோத்தமன் சிந்தித்திருக்க.

(நேரிசையாசிரியப்பா)

புருடோத்தமன். (தனிமொழி)யார்கொலோ வறியேம் ! யார்கொலோ வறியேம்
வார்குழல் துகிலொடு சோர மாசிலா
மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள்
விரக தாபத்தால் தரளநீ ரிறைப்ப
5.பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு
விரல்நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து
விண்ணணங் கனைய கன்னியர் பலரென்
கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச்
சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து
10.பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ?
எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா
நவ்வியு நண்பு நலனு முடையவள்
யார்கொலோ? நாள்பல வானவே. ஆ ! ஆ !
விழிப்போ டென்கண் காணில் ! - வீண் ! வீண் !
15.பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்?
கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ?
நனவினு மொழுங்காய் நாடொறுந் தோற்றும்.
பொய்யல. பொய்யல. ஐய மெனக்கிலை.
நாடொறு மொருகலை கூடி வளரும்
20.மதியென வெழில்தினம் வளர்வது போலும்.
முதனாள் முறுவல் கண்டிலம் ; கடைக்கணில்
ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது.
நேற்றிராக் கண்ட தோற்றமென் னெஞ்சம்