பக்கம் எண் :

மனோன்மணீயம்
55

பருகின தையோ ! கரிய கூந்தலின்
25.சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப்
பொருசிலைப் புருவ மொருதலை நெகிழ்த்துச்
செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி
உழுவலோ டென்முக நோக்க வெழுங்கால்
என்னோக் கெதிர்ப்படத் தன்னோக் ககற்றி,
30.வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய
சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம்
நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண்
தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி
சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி,
35.அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து
மந்த காசந் தந்தவள் நின்ற
நிலைமையென் னெஞ்சம் நீங்குவ தன்றே !
தேவ கன்னியர் முதலாந் தெரிவையர்
யாவரே யாயினும் மென்கண் தனக்கு
40.மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ?
அறியுமா றிலையே ! அயர்க்குமா றிலையே !
உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில்
இன்றே மறத்தல் நன்றே. ஆம்! இனி
மறத்தலே கருமம், மறப்பது மெப்படி?
45.போரெவ ருடனே யாயினும் புரியிலவ்
ஆரவா ரத்தி லயர்ப்போ மன்றி -

(சேவகன் வர)


சேவகன்.எழுதரு மேனி யிறைவ ! நின் வாயிலில்
வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான்.

புரு.யாரவன்?

சேவ,

பேர்பல தேவனென் றறைந்தான்.


புரு. (தனதுள்)50.சோரன் ! வரச்சொல்.

தூதேன்? எதற்கிக்

கயவனைக் கைதவ னனுப்பினான்?
நயந்தீ துணர்ந்து நட்டிலன் பேரன்மே.

1

(பலதேவன் வர)


பலதேவன்.மங்கலம். மங்கலம் ! மலய மன்னவ !