பக்கம் எண் :

மனோன்மணீயம்
56

பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத்
55.தன்தோள் தாரணி தாங்க வெங்கும்
ஒன்னார் தலையொடு திகிரி யுருட்டிக்
குடங்கை யணையிற் குறும்பர் தூங்க
இடம்பாாத் தொதுங்குந் தடமுற் றத்து
மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும்
60.வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த
தூதியான். என்பே ரோதில்அவ் வழுதியின்
மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன்,
பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன்
குடிலேந் திரன்மகன் -

புரு. (தனதுள்)

மடையன்.

வந்ததென்?


பலதே.65.அப்பெரு வழுதி யொப்பறு மாநகர்
நெல்லையிற் கண்டு புல்லா ரீட்டமும்
அரவின தரசும் வெருவி ஞெரேலெனப்
பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம்
ஆணவத் தாழ்ச்சியு நாண வகழ்வலந்
70.தொட் டஞ்ஞானத் தொடர்பினு முரமாய்க்
கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து
எட்டி யழுத்தி யிழுக்கும் புலன்களின்
யந்திரப் படைக ளெண்ணில வியற்றி -

புரு.வந்த வலுவலென்?

பலதே.

மன்னவா ! நீயாள்

75.வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த
நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே?
எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு
பரவு பாடையும் விரவு மாசாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா -

புரு.80.நல்லது ! சொல்லாய்.

பலதே.

தொல்லையாங் கிழமைபா

ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த
வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு
எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள்