பக்கம் எண் :

மனோன்மணீயம்
57

சதியாய் நீயா சாண்டாய் : -

புரு.

அதனால்?


பலதே.85.அன்னதன் னுரிமை மீட்க வுன்னியே
முதுநக ராமெழின் மதுரை துறந்து
நெல்லையைத் தலைநகர் வல்லையி லாக்கி
ஈண்டின னாங்கே.

புரு.

வேண்டிய தென்னை?


உரையாய் விரைவில்.


பலதே.

உதியனும் செழியனும்

90.போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்?
பங்கமி லிரவியுந் திங்களுந் துருவி
எதி்ர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள்
மறைய இவ்வுலகில் வயங்கிருள் நிறையும்.
அவரந் நிலையி லமாந்திடி லவ்விருள்
95.தவறாத் தன்மைபோல் நீவி ரிருவருஞ்
சமர்செயி லுலகந் தாங்கா தென்றே
எமையிங் கேவி யிவ்வவைக் கேற்றவை
நீதியா யெடுத்தெலா மோதி, நன் செய்நாடு
உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே
100.கடனெனக் கழறிப் பின்னிக ழன்கருத்து
அறிந்து மீளவே விடுத்தான்.

புரு.

ஆ ! ஹா !

முடிந்ததோ? இலையெனின் முற்றுஞ் செப்புவாய்.

பலதே.மேலு மொருமொழி விளம்புதும் வேந்தே !
சாலவும் நீவிர் பகைக்கிற் சகமெலாம்
105.ஆழ்துயர் மூழ்கலு மன்றி உங்கட்கு
ஏது விளையுமோ அறியேம். ஆதலின்,
அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன்
வெஞ்சமர் விளைத்தல் நன்றல.

புரு. (பயந்தார்போல)

ஆ ! ஆ !