| பலதே. | | நன்செய்நா டினிமேன் மீ்ட்டு நல்கலும் | | 110. | எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் திரைக்கட லமுதே யுருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிருங் கிருந்தது. | | 115. | அன்னவள் மன்ன ! நின் அரியணை யமரில் தென்னவன் மனமுந் திருந்தும். நன்செய்நா டுன்னது மாகும். |
| புரு. | | உண்மை ! ஓ ஹோ ! | | | வண்டு மலரிடை யணையவுன் நாட்டிற் கொண்டு விடுவரே போலும். நன்று ! | | 120. | கோதறு மிருபுறக் காத லன்றியெம் நாட்டிடை வேட்டன்மற் றில்லை. மேலும்நம் அரியணை யிருவர்க் கிடங்கொடா தறிகுதி. |
| பலதே.(தனதுள்) | | சுரிகுழல் வதுவை போனது. சுகம் ! சுகம் ! |
| புரு. | | ஆதலின் முடிவில்நீ யோதிய தொழிக. | | 125. | நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோ லடியிறை வைத்துப் | | 130. | புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவிய ரவாவிய மங்கல நாணே யிரந்து நாணந் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவுகூ சாமற் | | 135. | பாண்டியற்கு அளிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னு முயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றா லென்றே யறிகுதி. கருதா துனையிங் கேவிய கைதவன் |
|
|
|