| | ஒருவா ரத்திற் குள்ளா யவன்முடி | | 140. | யார்பகை யின்மையா லிதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேற் காண்குவம் அவர்வலி யினையும். | | (சேவகனை நோக்கி) | 145. | அருள்வர தனையிங் கழையாய் ! சேவக ! | | | (அருள்வரதன் வர) |
| பலதே.(தனதுள்) | | சிந்தனை முடிந்தது. |
| அருள்வரதன். | | வந்தனம் ! வந்தனம் ! |
| புரு. | | நல்லது ! செழியன் நெல்லையே நோக்கி நாளையா மேகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். |
| புரு. (பலதேவனை நோக்கி) | 150. | செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையுந் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் | | 155. | ஆணைக் கடங்கி யமர்க. எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே யெஞ்சா தியம்புதி. ஏகாய், ஏகாய் ! | | | (பலதேவன் போக) |
| (தனதுள்) | | முட்டா ளிவனை விட்டவன் குட்டுப் | | 160. | பட்டபோ தன்றிப் பாரா னுண்மை. பச்சாத் தாபப் படுத்துவம். நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண மேகினு மேகு மினியே. | | | 2 | | | (புருடோத்தமன் போக) | | | (காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச்சுற்றி நிற்க) |
|
|
|