பக்கம் எண் :

மனோன்மணீயம்
60

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அருள்,தீர்ந்தது சூரரே ! நுந்தோள் தினவு.
165.நேர்ந்தது வெம்போர்.

யாவரும்.

வாழ்கநம் வேந்தே!


முதற்படைஞன்.நொந்தோம் ; நொந்தோ மிதுகா றுறங்கி.

யாவரும்.உய்ந்தோம் ; உய்ந்தோம், வாழுக வுன்சொல் !

2 - ம் படை,பெரும்போ ரிலாநாள் பிறவா நாளே.

3 - ம் படை,மெய்யோ? பொய்யோ? ஐய ! இதுவும்.

4 - ம் படை,170.யாவரோ பகைவர்? அருளா பரணா !
தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?

அருள்,பாண்டியன்.

யாவரும் (இகழ்ச் சியாய்)

பாண்டியன் ! சீச்சீ ! பகடி !


அருள்,ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம். -

யாவரும்.வியப்பு ! வியப்பு !

3 - ம் படை,

வேற்றா ளொருவனென்

175.அயற்புறம் போனான் ; அவன்முகம் நோக்குழி
வியர்த்தனன் ; தூதுடை கண்டு விடுத்தேன்.

முதற்படை,அவன்றான் ! அவன்றான் ! அவன்றான் ! தூதன்

4 - ம் படை,யாதோ காரணம்? ஓதாய். தலைவா !

2 - ம் படை,அப்பந் தின்னவோ? அலால்குழி யெண்ணவோ
180.செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ !

அருள்,நல்லது வீரரே ! நாளை வைகறை
நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச்
செல்லற் குரியன திட்டஞ் செய்வான்
வல்லையி லேகுதும். மங்கல முமக்கே.

3

(அருள்வரதன் முதலியோர் போக)

இரண்டாம் அங்கம் : 3 - வது களம் 
முற்றிற்று.