| | தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவ னிப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே ! | | |
| | குடில, | 30. | முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை.நம் மமுதின் எழிலெலா மெங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாந் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூலுணர்வுந் தெளிந்த தோருளமுஞ் | | 35. | செப்பின ரென்றிடி லொப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரச னமது தாயின் றன்மை சகலமு மி்ப்போது அறியா தொழியான். அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது | | 40. | தூதுவன் யாவு மோதுவன் திண்ணம். அம்ம ! தனியே யவன்பல பொழுதும் மம்ம ருழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலாம் மாறா தறைந்தறைந்து, ‘இமையவர் தமக்கு மிசையுமோ இவளது | | 45. | பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதா யிருந்திவட் காம்பணி யாற்றதும்? என்றுமிப் படியே யிவள்பணி விடையில் நின்றுநம் முயிர்விடி லன்றோ நன்றாம்?’ என்றவன் பலமுறை யியம்பல்கேட் டுளனே |
| ஜீவ, | 50. | ஐயமோ? குடிலா ! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுற லியல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு | | 55. | ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிலும்? |
| குடில, | | அதுகுறித் தன்றே யறைந்ததெம் மிறைவ ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினுஞ் சேரன் வெறிகொளுஞ் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, |
|
|
|