பக்கம் எண் :

மனோன்மணீயம்
64

60.யாதோ வெனவென் மனந்தா னயிர்க்கும்.
அவன்குண மொருபடித் தன்றே. அவனுளம்
உவந்தன வெல்லாம் உஞற்றுவ னென்றே
நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும்.

ஜீவ,ஆம் ! ஆம் ! அறிந்துளேம். ஏமாப் படைத்த
65.தன்னுளம் வியந்தவை யின்னவென் றில்லை.
வேதம் வகுத்த வியரசன் வியந்து
போற்றினும் பொருட்டா யெண்ணான் ; புலையன்
சாற்றுத லொருகால் தான்மகிழ்ந் திடுவன் ;
ஒருவன் றனதடி யிணையடைந் துறவே
70.பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன் ;
மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே
செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்,
மலரிடிற் காய்வன் ; பரலிடின் மகிழ்வன் ;
பெரியோர் சிறியோர் பேதைய ரறிஞர்
75.உரியோ ரயலோ ரென்றவ னொன்றும்
உன்னான். ஆயினு மின்னவை யாவும்
பிரபுத் துவமலாற் பிறவல குடிலா !

குடில,அடியேற் கவ்விடத் தையமொன் றுளது.
முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்
80.இணையிலாச் சேனையு மீறிலா நிதியுந்
துணிவறா வுளனும் பணிகிலா வுரனும்
உனைவிட லெவர்க்குள? ஓதுவாய். உன்வயின்
தினையள வேனுஞ் சேரா தாகும்
ஒருகுணம் பிரபுத் துவமென யாரே
85.யுரைதா வுன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்?
மலையன் தந்தைகீழ்த் தாய்கீழ் வளர்ந்தவன்
அலனெனுந் தன்மைநீ யாய்ந்திலை போலும்.
நன்றுதீ தென்றவ னொன்றையு நாடான்
என்றிடில் நாஞ்சொலும் நன்மையு மெங்ஙனம்
90.நாடுவ னெனவெனக்கு ஓடுமோர் நினைவே.

ஜீவ,

ஒக்கும் ! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும் :
குலகுரு கூறுதல் கொண்டில மென்னில்