பக்கம் எண் :

மனோன்மணீயம்
65

நலமன் றென்றே நாடி யனுப்பினோம்.
நயந்தில னாகி லவன்விதி. நமக்கென்?
95.இயைந்த கணர்வே றாயிரம். காண்குதும்.

குடில,அதற்கே னையம்? ஆயிரம் ! ஆயிரம் !
இதுமாத் திரமன் றிறைவ ! சேரன்
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ
என்றே யென்மனம் பதறும். ஏவுமுன்
100.உரைக்க வுன்னினே னெனினு முன்றன்
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன்.

ஜீவ,வெருவலை குடிலா ! அரிதாம் நமது
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்
105.செருக்குந் திண்ணமும் வெறுக்கையும்போம்விதம்!
விடுவனோ சிறிதில்? குடில ! உன் மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப்
பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.

(ஒற்றன் வர)


ஒற்றன்.மங்கலம் ! மங்கலம் ! மதிகுல மன்னவா !

ஜீவ,110.எங்குளார் நமது தூதுவர்?

ஒற்றன்.

இதோ ! இம்

மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ்
ஓலையில் விளங்கும். ஒன்னல ரேறே !

(ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க.)


குடில,(தனதுள்)ஒற்றன் முகக்குறி யோரிலெம் மெண்ணம்
முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை.
115.போரும் வந்தது. நேரும் புரவலற்
கிறுதியு மெமக்குநல் லுறுதியும் நேர்ந்தன.

ஜீவ,(தனதுள்)துட்டன் ! கெட்டான் ! விட்டநந் தூதனை
யேசினான் ; இகழ்ந்தான் பேசிய வதுவையும்,
அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப்
120.படியில் விடுவனாம் : படைகொடு வருவனாம் :
முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன் !