பக்கம் எண் :

மனோன்மணீயம்
66

(குடிலனை நோக்கி)குடிலா ! உனைப்போற் கூரிய மதியோர்
கிடையார். கிடையார். அடையவும் நோக்காய்.
கடையவன் விடுத்த விடையதி வியப்பே !

(குடிலன் ஓலைநோக்க)


குடில,125.நண்ணலர் கூற்றே ! எண்ணுதற் கென்னே !
உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற்
குத்தவா வெனுமுன் மத்தன்அன் றேயிவன் !
யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும்
வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய
130.உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும்
இழிவையு மெண்ணியே யழியு மென்னுளம் !

ஜீவ,பொறு ! பொறு ! குடில ! மறுவிலா நமக்கும்
ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங்
கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி.

குடில,135.செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்?
ஒருமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான்.
வெற்றியாம் முற்றிலுங் கொள்வே மெனினும்,
ஆலவா யுள்ள படைகளை யழைக்கிற்
சாலவும் நன்றாம். காலமிங் கிலையே.

ஜீவ,140.வேண்டிய தில்லை யீண்டவ ருதவி.
தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம்
ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன்.
பின்னழைத் திடுவோம். அதுவே நன்மை.
புலிவேட்டைக்குப் பொருந்துந் தவிலடி
145.எலிவேட் டைக்கு மிசையுமோ? இயம்பாய்

குடில,அன்றியு முடனே யவன்புறப் படலால்
வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால்.

ஜீவ,இருக்கினென்? குடிலா ! பயமோ இவற்கும்?
பொருக்கெனச் சென்றுநீ போர்க்குவேண் டியவெலாம்
150.ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம்.

(ஜீவகன்போக, வாயிற்காத்த சேவகன் வணங்கிவந்து)