| (குடிலனை நோக்கி) | | குடிலா ! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே ! | | | (குடிலன் ஓலைநோக்க) |
| குடில, | 125. | நண்ணலர் கூற்றே ! எண்ணுதற் கென்னே ! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா வெனுமுன் மத்தன்அன் றேயிவன் ! யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய | | 130. | உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையு மெண்ணியே யழியு மென்னுளம் ! |
| ஜீவ, | | பொறு ! பொறு ! குடில ! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. |
| குடில, | 135. | செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒருமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வே மெனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கிற் சாலவும் நன்றாம். காலமிங் கிலையே. |
| ஜீவ, | 140. | வேண்டிய தில்லை யீண்டவ ருதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம் ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம். அதுவே நன்மை. புலிவேட்டைக்குப் பொருந்துந் தவிலடி | | 145. | எலிவேட் டைக்கு மிசையுமோ? இயம்பாய் |
| குடில, | | அன்றியு முடனே யவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். |
| ஜீவ, | | இருக்கினென்? குடிலா ! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்குவேண் டியவெலாம் | | 150. | ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம். | | | (ஜீவகன்போக, வாயிற்காத்த சேவகன் வணங்கிவந்து) |
|
|
|