பக்கம் எண் :

மனோன்மணீயம்
67

சேவகன்.விழுமிய மதியின் மிக்கோய் ! நினைப்போற்
பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம்
நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே.

குடில,(தனதுள்)நல்லது ! நல்லது ! செல்லா யப்பால்.

(சேவகன் போக)


155.சொல்லிய தென்னை? சோரன் நமது
நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ?
இனையவ னெங்ஙன முணருவன்? வினையறி
நாரண னோர்ந்து நவின்றனன் போலும் -
காரண மதற்குங் கண்டிலம். ஆ! ஆ!
160.மாலைக் காக வாழ்த்தின னிவனும் !
புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல.
“கள்ள மனந்தான் துள்ளு” மென்பதுந்
“தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதுங்
“குற்ற முள்ளோர் கோழைய” ரென்பதுஞ்
165.சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே
கண்டனம். அவனெம் அண்டையி லம்மொழி
விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி
யுளம்பட படத்தென் னூக்கமும் போனதே.
சிச்சீ ! இச்சைசெ யச்சஞ் சிறிதோ !
170.வஞ்சனையாற் பெறும் வாழ்வீ தென்னே !
நஞ்சுபோற் றனது நெஞ்சங் கொதிக்கக்
கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத்
தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து
பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை
175.எறிகட லுலகி லிலையிலை. நில் ! நில் ! -
நீதியை நினைத்தோ நின்றேன்? பள ! பள !
ஏதிது? என்மன மிங்ஙனந் திரிந்தது !
கொன்றபி னன்றோ முதலை நின்றழும்?
வா வா காலம் வறிதாக் கினையே.
180.ஓவா திவையெலா முளறுதற் குரிய
காலம் வரும்வரும். சாலவு மினிதே !

1

(குடிலன் போக.)

மூன்றாம் அங்கம் : முதற்களம் 
முற்றிற்று.