பக்கம் எண் :

மனோன்மணீயம்
68

மூன்றாம் அங்கம்

2 - வது களம்

இடம் : ஊர்ப்புறம் ஒரு சார். காலம் : எற்பாடு.

நடன் : நடராஜன்.
(நேரிசை ஆசிரியப்பா)

நடராஜன். (தனிமொழி)காலையிற் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய்
இன்றிரா முடுக்கிணும் முடியும். துன்றராக்
கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம்
5.பின்னிய கூந்தற் பேதையி னிளமுகம்
என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி.
அதனா லன்றோ விதுபோல் விரைவில்
இவ்வினை யிவ்வயின் இனிதின் முடிந்தது?
எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை
10.இயக்குதற் கின்பம் பயக்குமோ ரிலக்கு
வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம்.
ஈண்டெப் பொருள்தா னிலக்கற் றிருப்பது?
இதோ ஓ ! இக்கரை முளைத்தவிச் சிறுபுல்
சதாதன் குறி்ப்பொடு சாருதல் காண்டி.
15.அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி
இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து நல்லூ ணருத்திப்
பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ ! என்
20.தூசிடைச் சிக்குந் தோட்டியுங் கொடுத்தே,
“இவ்வயின் யாமெலாஞ் செவ்விதில் துன்னில்
தழைப்பதற் கிடமிலை : சிறார்நீர் பிழைப்பதற்கு
ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார்
சிக்கிநீர் சென்மின் !” எனத்தன் சிறுவரைப்
25.புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும்