| நடராஜன். (தனிமொழி) | | காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய் இன்றிரா முடுக்கிணும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் |
| 5. | பின்னிய கூந்தற் பேதையி னிளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி. அதனா லன்றோ விதுபோல் விரைவில் இவ்வினை யிவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை |
| 10. | இயக்குதற் கின்பம் பயக்குமோ ரிலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள்தா னிலக்கற் றிருப்பது? இதோ ஓ ! இக்கரை முளைத்தவிச் சிறுபுல் சதாதன் குறி்ப்பொடு சாருதல் காண்டி. |
| 15. | அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூ ணருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ ! என் |
| 20. | தூசிடைச் சிக்குந் தோட்டியுங் கொடுத்தே, “இவ்வயின் யாமெலாஞ் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை : சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின் !” எனத்தன் சிறுவரைப் |
| 25. | புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் |