பக்கம் எண் :

மனோன்மணீயம்
70

நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்?

(நீரைக் கையாற்றடுத்து)60.நிரந்தரம் ! ஐயோ ! நொந்தனை ! நில் ! நில் !
இரைந்ததென்? அழுவையோ? ஆயி னேகுதி.
நீரே ! நீரே ! என்னையுன் னிலைமை?
யாரே யுனைப்போ லனுதின முழைப்போர்?
நீக்கமி லன்பும் ஊக்கமும் உறுதியும்
65.உனைப்போ லுளவேற் பினைப்பே றென்னை? -

(நாங்கூழ்ப்புழு வை நோக்கி)ஓகோ ! நாங்கூழ்ப் புழுவே ! யுன்பாடு
ஓவாப் பாடே. உணர்வேன் ! உணர்வேன் !
உழைப்போ ருழைப்பி லுழுவோர் தொழின்மிகும்.
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ.
70.எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை.
விடுத்தனை யிதற்கா, எடுத்தவுன் யாக்கை.
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந் தும்,புகழ் வேண்டார் போல
75.ஒளிக்குவை யுன்குழி வாயுமோ ருருண்டையால் !
இப்புற் பயிர்நீ யிங்ஙன முழாயேல்
எப்படி யுண்டாம்? எண்ணா துனங்குங்
குறும்புசெய் யெறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
80.ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள?

(நாங்கூழ்ப் புழு
குழிக்குண்
மறைதலைநோக்கி)
விழுப்புகழ் வேண்டலை. அறிவோம். ஏனிது?
துதிக்கலம். உன்றெழில் நடத்துதி. ஆ ! ஆ !
எங்கு மிங்ஙனே யிணையிலா இன்பும்
பங்கமி லன்புந் தங்குதல் திருந்தக்
85.காணார் பேணும் வாணா ளென்னே !
அலகிலாத் தோற்றமோ டிலகிய வுலகிற்
சிதறிய குணக்கதிர் செறிந்து திரள
வைத்தசிற் றாடியின் மையமே யொத்த
உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர் -
90.நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே !
சினக்கனல் எழும்பும், நமக்கேன் இச்சினம்?