| | கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல்அத் தோற்றம்? புகையோ?- மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, | | 95. | பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப் பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? | | 100. | இதோ ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் றொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோ லெழுமொலி தேரொலி ! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம் - | | 105. | பொருதற்கு அன்றவன் வருவது. சரிசரி ! வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ ! மணப்பாட் டன்றிது. | | | (வஞ்சிநாட்டுச் சேனை யணிவகுத்து வழியில் ஒரு புறம் போக.படைப்பாணர் பாட.) |
(வஞ்சித் தாழிசை) | படைப்பாணர். | | அஞ்சலி லரிகாள் ! நும் சஞ்சிதப் பெருவாழ்வெம் வஞ்சியன் சினத்தாற்கண் துஞ்சிய கனவேகாண். | | | 1 |
| பாணர். | | எஞ்சலில் பகைகாள் ! நும் மஞ்சுள மணிமகுடம், வஞ்சியன் சினத்தானீர் கஞ்சியுண் கடிஞையேகாண். | | | 2 |
| பாணர். | | மிஞ்சிய பகைகாள் ! நும் துஞ்சிய பிதிர்க்கூட்டம், வஞ்சியன் சினத்தாலென், நெஞ்சிலும் நினையார்காண். | | | 3 |
|
|
|