பக்கம் எண் :

மனோன்மணீயம்
72

படை,

ஜே! ஜே! புருஷோத் தமர்க்கு ஜே! ஜே!


நட,பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும்,
வார்கழ லொலியும், வயப்படை யொளியும்,
110.பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச்
சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை
பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில்
உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும்,
இருகனல் நடமிடு மொருகரு முகிலில்
115.மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை
காட்டிய முகக்குறி யாவும் நன்றல.
வேட்டலோ இதுவும் ! விளையுமா றெவனோ !
நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த
கொய்யுளைத் திரைகடற் கூட்டமும், பெய்மத
120.மைம்முகி லீட்டமும், வான்தொடு விலோதனப்
பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச்
செல்லும் அசலத் திரளுஞ் செறிந்து,
நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம்.
அந்தோ ! அந்தோ ! மனோன்மணி வதுவை
125.வந்தவா றிதுவோ ! வந்தவா றிதுவோ !

(இரண்டுழவர்கள் வர)


முதலுழவன்.வியப்பென்? சுவாமி !

நட,

வயப்படை வந்தது


அறிவையோ நீயும்?

முதல் உழ,

அறிவேன். போருக்கு


அழைத்திடில் யாவ ரணுகார்?

நட,

வழுதி


மணமொழி வழங்க வன்றோ விடுத்தான்?

2 - வது உழ,130.மணமொழி பிணமொழி யானது. குடிலன்
கைதொடின் மஞ்சளுங் கரியா கும்மே !

நட,செய்ததென்?

முதல் உழ,

ஐய ! அதுநாம் அறியோம்.


குடிலன் படிறன். கொற்றவன் நாடும்