பக்கம் எண் :

மனோன்மணீயம்
73

முடியுங் கவர்ந்து மொய்குழன் மனோன்மணி
135.தன்னையுந் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான்.
மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச்
சூதாய்த் துணைவரக் கூவினான்.

நட,

சீச்சீ !


ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான்.
பொய்பொய், புகன்றதார்?

முதல் உழ,

பொய்யல. பொய்யல.


140.ஐய ! நா னறைவது கேட்டி, எனது
மைத்துன னவன்தாய் மரித்த மாசம்
உற்றதா லந்தத் திதியினை யுணரச்
சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில்.

(2 -வது உழவனை நோக்கி).அன்றுநா ளாதித்த வாரம். அன்றுதான்

145.சாத்த னுன்னுடன் சண்டை யிட்டது.

(நடராஜனை நோக்கி)சாத்திரி தரையி லிருக்கிறார். அவரது
மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் -

(நாற்புறமும் நோக்கி செவியில்)இருந்து பலபல இரகசிய மியம்புவர் -

நட,திருந்தச் செப்பாய். யாருள ரிவ்வயின்?

2 - வது உழ,150.இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு
உற்ற ஜோசியர்.

முதல் உழ,

பொறு !யா னுரைப்பன்.


மற்றவ் வெல்லையென் மைத்துன னொதுங்கி
யருகே நின்றனன். அப்போ தறைவர் :-
“மருகா ! நேற்று மந்திரி மனைவி
155.பலபல பேச்சுப் பகருங் காலை,
பலதே வன்றன் ஜாதக பலத்தில்
அரச யோக முண்டென் றறைந்தது
விரைவில் வருமோ என்று வினவினள் ;
வரும்வரும் விரைவி லென்றேன் யானும்.
160.மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி
வதுவைக் காரியம் பேசினள். மற்று அது
நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள்.