| | நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற் | | 165. | சிரித்தன ளென்பது முகத்தில் தெரிந்தேன்.”- எனப்பல இரகசியம் இயம்பி “வலியோர் மனக்குறி, முகக்குறி, வறிதாஞ் சொற்கள் இவைபோல் வருபவை யெவைதாங் காட்டும்?” எனவுரைத் திருவரு மெழுந்துவின் நகைத்தார். | | 170. | பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே யெனக்கிங் கிவையெலா மியம்பினன். உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு:மற் றவனைக் கண்டுநீ வினவே. |
| 2 - வது உழ, | | வேண்டாம்! வேண்டா மையம்மற் றதற்கு. | | 175. | மீண்டு மொருமொழி கேள்.இவ் வழியாய்த் தூதுவர் போகுங் காலைத் தாக ஏதுவால், இரும்படி யிராம னென்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம் அங்கியா னிருந்தேன். “அரண்மனைச் செய்தி | | 180. | என்ன?” என் றேற்கவ னியம்பும் : “மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண்” டென, “எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தவ னகன்றான். |
| முதல் உழ, | | பலதே வற்கிவன் நலமிகு சேவகன். |
| 2 - வது உழ, | 185. | குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம். |
| முதல் உழ, | | ஆயினும், நமக்கஃ திழிவே. மேலுந் தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுய ரொருவரும் ஆற்றார். |
| 2 - வது உழ, | | அறிவிலாத் | | | தந்தையர் தம்வினை மக்களைச் சாரும், | | 190. | சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை விடுமோ? சொல்லாய். |
| முதல் உழ, | | விதியெனப் பலவும் | | | படியோர் பாவனை பண்ணித் தமது கடமையின் விலகுதன் மடமை. அதனால் |
|
|
|