| | நாட்டிற் போர்வரின் நன்குபா ராட்டி | | 195. | யெஞ்சா வெஞ்சம ரியற்றலே தகுதி. |
| 2 - வது உழ, | | அரசன், அரசனேற் சரியே. சுவாமி ! உரையீர் நீரே. திருவார் வாணியை யறியீர் போலும், |
| நட, | | அறிவோம். அறிவோம் ! | | | நல்ல தப்புறஞ் செல்லுமின் நீவிர்.- | | | (உழவர் போக) |
| (தனதுள்) | 200. | ஏழைகள் ! தங்க ளாழமில் கருத்தில் தோற்றுவ தனைத்துஞ் சாற்றுவர். அவர்தந் தோற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல், சுகந்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினுங் | | 205. | கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும், காணக் களிப்பே ! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர் ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம். | | 210. | வரும்வித மிதுவே ! மட்குடத் துளநீர் புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரச ரமைச்ச ராதியர் தங்கள் சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை யிவைவழி | | 215. | ஒழுகிடும். அவைகளை யுழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடுந் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினுஞ் சொன்னவை முற்றுங் குடிலன் குணமுடன் கூடலா லவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், | | 220. | அடையவும் முனிவற் கறைகுவஞ் சென்றே. | | | (நடராஜன் போக) |
மூன்றாம் அங்கம் : இரண்டாவது களம் முற்றிற்று.
|