மூன்றாம் அங்கம் 3 - வது களம் இடம் : கன்னிமாடம், நிலாமுற்றம். காலம் : யாமம். மனோன்மணி உலாவ : வாணிநிற்க : செவிலி படுத்துறங்க. (நேரிசை யாசிரியப்பா) | செவிலி, (படுத்தபடியே) | | ஏதம்மா? நள்ளிரா எழுந்து லாவினை? - தூக்க மொழிவையேல் சுடுமே யுடலம் |
| மனோன்மணி, | | உடலா லென்பயன்? சுடவே தகுமது. வேர்க்கிற திவ்விடம். வெளியே யிருப்பல். | | 5. | போர்த்து நீ தூங்கு ! | | | (செவிலி தூங்க) | | | வாணீ ! உனக்கும் | | | உறக்க மில்லையோ? |
| மனோ, | | வருதி யிப்புறம். இரு இரு. - | | | (இருவரும் நிலாமுற்றத்திருக்க) | | | இதுவரை |
| | எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள் ! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் ! | | 10. | உறக்கங் கொண்டனள் செவிலி ! குறட்டைகேள் கையறு நித்திரை ! வாணீ ! மற்றிது வைகறை யன்றோ? |
| மனோ, | | இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது ! நிதியெடுப் பவர்போல் | | 15. | தோண்டலு மண்ணினைக் கீண்டலுங் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ வரவம்? |
| வாணி. (தனதுள்) | | போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ! ஒளிப்பனோ! |
| மனோ, | | கண்டதோ நகருங் காணாக் கனவு? |
|