பக்கம் எண் :

மனோன்மணீயம்
77

வாணி.கண்டது கனவோ தாயே?

மனோ,

கண்டது, -


20.கனவெனிற் கனவு மன்று : மற்று
நனவெனில் நனவு மன்று.

வாணி.

நன்றே !


கண்ணாற் கண்டிலை போலும் ! அம்ம !

மனோ,கண்ணா லெங்ஙனங் காணுவன்? கண்ணுளார் !

வாணி,எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை !

மனோ,25.எண்ணவும் படாஅர் ! எண்ணுளும் உளாஅர் !

வாணி,புதுமை ! ஆயினும் எதுபோ லவ்வுரு?

மனோ,இதுவென வொண்ணா உவமையி லொருவரை
எத்திற மென்றியான் இயம்ப ! நீயுஞ்
சித்திர ரேகை யலையே. விடுவிடு !
30.பண்ணியல் வாணீ ! வாவா ! உன்றன்
பாட்டது கேட்டுப் பலநா ளாயின !

வாணி,என்பா டிருக்க ! யாவரு மறிவார் !
உன்பா டதுவே யொருவரு மறியார்.

மனோ,பாக்கிய சாலிநீ ! பழகியும் உளையே !
35.நீக்குக இத்தீ நினைவு ! யாழுடன்
தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம்

(வாணி வீணைமீட்ட)


அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம் !

(வாணி பாட)

----------

 

சிவகாமிசரிதம்

(குறள்வெண் செந்துறை)

“வாழியநின் மலரடிகள் ! மௌனதவ முனிவ !

மனமிரங்கி யருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயிற்

பாழடவி யிதிற்சுழன்று பாதைவிடுத் தலையும்

பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே.

1