| பொறியரவின் சுடிகையுறு பொலன்மணியி னொளியும், | பொலிமதத்தின் கறையடியின் புலைமருப்பி னொளியும் | | அறிவரிய சினவுழுவை அழல்விழியி னொளியும், | அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே. | 10 |
| பிரிவரிய ஊசிவழி பின்றொடரு நூல்போற் | பேரயர்வின் மனமிறந்து பின்றொடரு மைந்தன், | | அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும் | அம்முனிவ னடியன்றி அயலொன்றும் அறியான். | 11 |
| ஒருங்கார நிறைமுளரி யுழையொதுக்கி நுழைந்தும், | உயாம்லையின் குகைகுதித்தும் ஓங்கார ஒலியே | | தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார் | சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே. | 12 |
| நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண் | நிறுவுதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி | | வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும் | மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி. | 13 |
| நின்றதனி யிடமிவர்கள் நோந்தவுடன் முனிவன் | நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி | | ஒன்றியமெய்ப் பத்தரில் தன்னுளங்கூசி யொருசார் | ஒதுங்குகின்ற மைந்தனக முவப்பவிவை யுரைக்கும் :- | 14 |
| “இனிநடக்க வழியுமிலை. இனித்துயரு மில்லை. | இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே | | பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து | பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே. | 15 |
| தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமற் | சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார். | | என்னேயிம் மனிதர்மதி !” எனநகைத்து முனிவன் | இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான். | 16 |
| இருந்தமுனி “வருந்தினவ ! ஏதுனது கூச்சம்? | இருவருமே யொருவரெனி லெவர்பெரியர் சிறியர்? | | திருந்தஅன லருகிலினிச் செறிந்துறைதி மைந்த ! | சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே.” | 17 |
|
|
|