யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே
மகன்மலைவு தெளிந்துவெளி வரும்வகைகள் பகர்ந்தான்.
18
பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத்
சிந்தைநனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான்.
19
திகைக்கவெலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை யெனவே
மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே.
20
முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும் :-
இல்லமகன் றிவ்வுருவ மெடுத்திவண்வந் தனையோ?
21
இழந்தனையோ அரும்பொருளை? இகழ்ந்தனரோ நண்பர்
கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய்.
22
அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய்.
காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே.
23
நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென என்ணாய் !
பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம் !”
24
ஏதிலனீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து
வெளிப்பட்ட கள்வனும் போல்வெட்கிமுகம் வெளுத்தான்.
25