யிருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி
வேஷரக சியங்களெலாம் வெட்டவெளி யான.
26
நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும்.
உண்மைபெறு கண்ணிணையும் பெண்மையுருத் தெரிக்கும்.
27
குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும்.
வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும்.
28
யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும் :-
தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே !
29
வணிககுல திலகமென வாழ்வளொரு மங்கை.
இருமகளி ரொருபுருட ரென்னவர் மூவர்.
30
ஒருத்திமகள் யான்பாவி. ஒருத்திமுழு மலடி.
செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர்.
31
உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன்.
அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்?”
32
யூறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க
இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள்முன் தொடுத்தே.
33