| “மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம் | மடமகளென் றெனக்களித்தாள். மயங்கியதின்மகிழ்ந்து | | தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையுந் | தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன். | 34 |
| குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன். | குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன். | | வெறுப்பாக நினைந்தென்மேல் வேதனைப்பட் டவரும் | வெறும்படிறென் னுள்ளமென விட்டுவில கினரே. | 35 |
| பொருள்விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பிவந்தோர் | பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை. | | அருளரும்பி யெனைவிரும்பி யாளுமென ததிபர் | அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன். | 36 |
| ஒருவார மொருமாத மொருவருட காலம் | ஓயாம லுன்னியழிந் தேன்.உருவங் காணேன். | | திருவாருஞ் சேடியர்க்குச் செப்பவவர் சேருந் | திசைதேய மெவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார். | 37 |
| ஆயத்தார் கூடியெனை யாயவுந்தா னெட்டார். | அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து, | | தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும். | திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன. | 38 |
| கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக் | கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க ! | | உண்டெனத்தம் யூகநெறி யுரைப்பவரே யல்லால் | உள்ளபடி கண்டறிந்தோ ரொருவரையுங் காணேன். | 39 |
| உண்டெனிலோ கண்டிடுவன் ; இல்லையெனில் ஒல்லை, | யுயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி | | கண்டுயிலு மில்லிடந்தீ கதுவவெளி யோடுங் | கணக்காவிவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன். | 40 |
| தீர்த்தகுலம் மூர்த்திதலம் பார்த்துடலஞ் சலித்தேன். | திருக்கறுபற் குருக்கள்மடந் திரிந்துமன மலுத்தேன். | | வார்த்தை கத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய. | மறுத்துறங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே. | 41 |
|
|
|