மதம்பெருகு மாகுலமே ! வன்பிகமே ! சுகமே !
நவில்விரெனப் பின்றொடர்ந்து நாளனந்தங் கழித்தேன்.
42
இதுவரையுந் தேடியுமென் னதிபரைக்கண் டிலனே.
இக்காய மினியெனக்கு மிக்கவரு வருப்பே
43
ஆசைகொண்டு நானலைந்த கத்தனையும் பொய்யோ?
போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதோ?
44
நானுழைப்ப தறிவரெனி லேனெதிர்வந் திலரோ?
எந்நலமுங் கொல்லவென வெடுத்தசுடு காடே.
45
ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு
வகுத்தாறி னேன்சிறிது. மறுசாக்ஷி யில்லை.
46
எரியுமழ லெதிரேநின் றிசைத்தமொழி முழுதும்
முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி -
47
செப்புமுன மிருவருமற் றோருருவ மானார் !
இருவருமொன் றாயினரென் றேயறையுஞ் சுருதி.
48
பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த,
ஆர்வமுல கார்கவென ஆரணங்க ளார்த்த.
49