பக்கம் எண் :

மனோன்மணீயம்
84

ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ !

அறத்துறை புகுந்துயிர்க ளன்புவௌம் மூழ்க !

பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த

பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க !

50

-----------

மனோ,வாணீ ! மங்காய் ! பாடிய பாட்டும்,
வீணையி னிசையும் விளங்குநின் குரலுந்
40.தேனினு மினியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து
ஊனையு முயிரையு முருக்கும். ஆ ! ஆ ! -

(இருவரும் சற்று மௌனமாயிருக்க)

உனதுகா தலனெங் குளனோ? உணர்வைகொல்?

வாணி.எனது சிந்தையி லிருந்தனர் : மாறார்,

மனோ.ஆயினும் வெளியில்?

வாணி, 

அறியேன.் அம்ம !


மனோ,45.போயின இடம்நீ யறியாய்?

வாணி.

நாரணன்

முனிவர் தம்மடத் தேகினர் தனியென
ஓதின னோர்கால்.

மனோ,

ஓகோ ! ஓகோ ! -

(மௌனம்)

கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய்.

வாணி,அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும் !
50.ஒருநா ளந்தியி லிருவரு மெதிர்ச்சையாக்
கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும்
ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே,
பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன்
தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற்
55.சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று
சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து
அழுவது போல விழுமிய பரல்மேல்
ஒழுகும தீம்புன லோதையுங் கேட்டுப்
பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி