| 60. | யிருவரு மௌனமாய் நெடும்பொழு திருந்தோம். கரையிடை யலர்ந்த காவியொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர். வருவதிங் கறியா மதியிலி யதனைக் கண்ணினை யொற்றிலன்; உள்மணம் முகந்திலன்; | | 65. | மார்பொடு சேர்த்திலன் ; வார்குழற் சார்த்திலன் ; ஆர்வமும் அன்பும் அறியார் மான ஓடுந் தீம்புனன் மாடே விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன். முறுவலோ டவரும் ஏதோ மொழிய | | 70. | உன்னு முன்னரென் னன்னையங் கடைந்தாள். தீமொழி பலவுஞ் செப்பினள். யானோ? நாவெழலின்றி நின்றேன் நண்பர் மறுமொழி யொன்றும் வழங்கா தேகினர். அதுமுத லிதுகாறு அவர்தமை ஐயோ ! | | 75. | கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன். ஒருமுறை கண்டென் னுளக்கருத் தவருடன் உரைத்தபோ தன்றி யொழியா துயிரே ! |
| மனோ, | | உரைப்பதென் வாணீ ! உளமும் உளமும் நேர்படஅறியா வென்றோ நினைத்தாய்? |
| வாணி. | 80. | ஓர்வழிப் படரி னுணருமென் றுரைப்பர். |
| மனோ, | | ஏனதி லையம்? எனக்கது துணிபே ! பூதப்பொருட்கே புலன்துணை யன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம். இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? | | 85. | கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும். பட்டே யுணரு முட்டா ளர்கள்போல் தொட்டே யுணருந் துவக்கிந் திரியும். நுண்ணிய கருவியாங் கண்ணோ உணரும் எண்ணறச் சேய்த்தாம் நுண்ணிய ஒளியை ! | | 90. | கண்ணினு மெத்தனை நுண்ணிய துள்ளம் ! களங்க மறுந்தொறும் விளங்குமங் கெதுவும், உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம் |
|
|
|