பக்கம் எண் :

மனோன்மணீயம்
86

அண்மை சேய்மை யென்றிலை ; சென்றிடும்
எத்தனை பெட்டியுள் வைத்துநாம் பூட்டினும்
95.வானுள மின்னொளி ‘வடக்கு நோக்கி’ யைத்
தானைசைத் தாட்டுந் தன்மை நீ கண்டுளை !
போதங் கரைந்துமேற் பொங்கிடு மன்பை
பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய் !

வாணி.கூடுங் கூடும் ! கூடுமக் கொள்கை.
100.நம்பலாந் தகைத்தே !

மனோ,

நம்புவ தன்றிமற்று

என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள்
தருக்கவா தத்தால் தாபித் திடுவோர்
கரத்தாற் பூமணங் காண்பவ ரேயாம் !
அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத்
105.தரும்பக் குவமிலார் தமதுளம் போய
வழியே வாளா மனக்கணக் கிட்டு
மொழிவார் முற்றுந் துணிவா யெனயான்
இச்சிறு தினத்தி னியைந்தவை தம்மால்
நிச்சயித் துணர்ந்தேன். வாணீ ! ஐயோ !
110.நம்பலென் பதுவே யன்பின் நிலைமை !
தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை
யுளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச்
சிறிது சிறிதுதன் னறிவினை வளர்த்தே
யனுபவ வழியா யறிவதை யந்தோ !
115.அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம்
அலதெனி லிலையென வயிர்ப்போம்’ எனத்திரி
வாதிய ரன்பொரு போதுமே யறியார்
தாய்முலைப் பாலுள்நஞ்சு ஆய்பவ ரவரே !
முற்றுங் களங்க மற்றிடில் ! ஆ ! ஆ !

(உடல் புளகாங்கிதமாய் நடுங்க)

120.ஏதோ வாணீ ! இப்படி யென்னுடல்?-

வாணி,சீதமோ? தாயே !

மனோ,

சீ ! சீ ! இன்றெலாம்

இப்படி யடிக்கடி யென்னுடல் நடுங்கும் !