| வாணி, | | இக்குளிர் காற்றி னிடையே இருத்தல் தக்க தன்றினி. தாயே ! பாராய் ! | | 125. | அம்மழை பெய்யு மிம்மெனும் முன்னம். |
| மனோ, | | நனைந்திடி லென்னை ? கரைந்திடு மோவுடன் ? (எழுந்து மேகம் பார்க்க) |
| வாணி, (தனதுள்) | | ஐயோ ! ஏன்நான் அத்திசை காட்டினேன்? பொய்யெப் படியான் புகல்வன் ! |
| மனோ, | | வாணீ ! | | | ஊர்ப்புற மத்தனை யொளிஏன்? ஓ ! ஓ ! | | 130. | ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. போர்க்குறி போலும். புகலுதி யுண்மை. | | | (மழை இரைந்து பெய்ய) | | | அஞ்சலை அஞ்சலை. இதோவென் னெஞ்சிடை வெஞ்சரம் பாயினு மஞ்சிலேன் ! விளம்பு. |
| வாணி. | | இம்மழை நிற்கலை அம்ம ! அறைகுவன், - | | 135. | விளம்புவன். வீட்டுள் வருக ! தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே ! | | | (இருவரும் போக) |
மூன்றாம் அங்கம் : 3 - வது களம் முற்றிற்று
|