பக்கம் எண் :

மனோன்மணீயம்
89

நோவுஞ் சாவு மொன்றே. அன்றியும்
உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ?
பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற
எஞ்சா திருந்த இப்புவி யனைத்தும்

30.இரவியின் மண்டலத் தொருசிறு திவலை.
பரவிய வானிடை விரவிய மீனினம்
இரவியி லெத்தனை பெரியதுஒவ் வொன்றும் !
இரவியு மிம்மீ னினங்களுங் கூடில்
ஒருபிர மாண்டமென் றுரைப்பர். இதுபோல்

35.ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர்.
ஆயிரத் தெட்டெனல் அலகிலை யென்பதே.
இப்பெரு முலகெலா மொப்பறு திருமால்
உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில்
வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில்

40.ஓரித ழதனி லோர்சா ருதித்த
நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை.
ஏன்மிக ! நாமிங் கோதிய மாலும்
ஒருபெருங் கடலி லுறுதுரும் பென்ப.
அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில்

45.எப்படிப் பார்க்கினு மிசையாப் பேய்த்தேர்.
இங்கிவை யுண்மையேல், எங்குநா முள்ளோம்?
நீர் யார்? நான் யார் ! ஊரெது? போரெது?
போரெனப் பொறுக்கலீர் ! ஓ ! ஓ ! பாரும் !
மருவறு மாயா மகேர்ததி யதனிற்

50.புற்புத மனைய பற்பல அண்டம்
வெடித்துஅடங் கிடுமிங் கடிக்கடி, அதனைத்
தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்?
விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம்.
இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம்.

55.தன்றொழில் சலிப்பற இயற்றும். மற்றதனுள்
படுபவர் திரிகையுட் படுசிறு பயறே.
விடுபவர் யாவர்பின் ! விம்மி விம்மிநீர்
அழுதீர், தொழுதீர் ஆடினீர், பாடினீர்,
யாரென் செய்வர் ! யாரென் செயலாம் !