| | செப்பிய நிட்டையுஞ் சித்தநற் சுத்தியும் எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம் |
| 95. | ஒப்பறு நுந்திற மென்றோ உன்னினீர்? அந்தோ ! அந்தோ ! அயர்ப்பிது வியப்பே ! சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்? |
| 100. | ஆவா ! யாம்முன் அல்லும் பகலும் ஓவாப் பாவமே யுஞற்றியெப் போதும் ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும், பிறர்புக ழதுவே யறமெனப் பேணியும் ; மகிழ்கினும் துயருழந் தழுகினுஞ் சினகரந் |
| 105. | தொழுகினும் நன்னெறி யொழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினு மெத்திசை திரியினும் “நாமே யுலகின் நடுநா யகம்நம் க்ஷேமமே ஜகசிருஷ் டியினோர் பெரும்பயன்” என்னவிங் கெண்ணி யெமக்கெமக் கென்னுந் |
| 110. | தந்நய மன்றிப் பின்நினை வின்றி முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும் ; தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தீயிடைத் துடித்தும் ; ஐயஞ்சிறி தடையில் வாய்மண் ணிறைய மதக்குழி யதனுள் |
| 115. | குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும் ; பிறர்புகழ் காணப் பெரிதக முடைந்தும் ; பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும் ; சிறியரைக் காணிற் செருக்கியும் ; பெரியரைக் காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும் ; |
| 120. | எனைத்தென எண்ணுகேன் ! நினைக்கினு முடலம் நடுங்குவ தந்தோ ! நம்மை யிங்ஙனம் கொடும்பே யாயிரங் கூத்தாட் டியவழி, விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள் “ஏ ! ஏ ! கெடுவாய் ! இதுவல உன்நெறி |
| 125. | வா ! வா ! இங்ஙனம்.” எனமன மிரங்கிக் கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த |
|
|
|