பக்கம் எண் :

மனோன்மணீயம்
93

பாரும் ! பாரும் ! நீரே கூறிய
சிலந்தியின் பரிவே யிலங்கிடு முறைமை !
பூரிய உயிரிஃ தாயினும், தனது
சீரிய வலையிற் சிக்குண் டிறந்த

165.ஈயினை யீதோ இனியதன் குஞ்சுகள்
ஆயிர மருந்த அருகிருந் தூட்டி
மிக்கநல் லன்பெனும் விரிந்தநூல் தெளிய
அக்கரம் பயில்வ ததிசயம் ! அதிசயம் !
இப்படி முதற்படி. இதுமுத லாநம்

170.ஒப்பறும் யாக்கையா முயர்படி வரையுங்
கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால்
இத்தனி யுலகி லெத்துயர் காணினும்
அத்தனை துயரும்,நம் மழுக்கெலா மெரித்துச்
சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க

175.வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு
உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகாற்
காரண காரியங் காண்குவ மல்லேம்.
யாரிவை யனைத்தும் ஆய்ந்திட வல்லார்?
பாரிசா தாதிப் பனிமல ரந்தியின்

180.அலர்தலே யன்னவை விளர்நிறங் கிளர
நறுமணங் கமழ்தற் குறுகா ரணமென
நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர்
நினைத்தோங் கொல்லோ? உரைத்தபின் மற்றதன்
உசிதம்யா ருணரார்? நிசியலர் மலர்க்கு

185.வெண்மையு நன்மண முண்மையு மிலவேல்
எவ்வண மவற்றி னிஷ்டநா யகராம்
ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம்
மேயிடி லன்றோ காய்தருங் கருவாம்?
இவ்வி நோக்கிடி லெவ்வித தோற்றமுஞ்

190.செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்
அவ்வவற் றுள்நிறை யன்பே யாக்கும்.
சிற்றறி வாதலான் முற்றுநா முணரோம்.
அந்தியி லிம்மல ரலர்வேத னென்பதிங்கு
அறிகிலோ மாயினு மதற்குமோர் காரணம்