பக்கம் எண் :

மனோன்மணீயம்
94

195.உளதென நம்பலே யூகம். அதனால்
உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது
நலமுற நமக்கிங் கிலகா ததினாற்
பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர்
இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்?

200.யாரிங் குலகெலா மறிந்திட வல்லார்?
பாருமிங் கீதோ ! பரம தயாநிதி
நங்குரு நாத னென்பதா ரொவ்வார்?
நம்புவம் நாத னென்பதா ரொவ்வார்
ஆயினும் பாரும் ! அம்மணி மனோன்மணி,

205.ஏதோ ஊழ்வினை யிசைவால் தனது
காதாற் கேட்கவுங் கண்ணாற் காணவும்
இல்லா வொருவனை யெண்ணி மயங்கினள்.
அல்ல லிதுவே போதும். அஃதுடன்,
அப்புரு டன்றோ னாரென ஆயில்

210.ஒப்புறு புருடோத் தமனே யென்ன
எப்படி நோக்கினு மிசையும். அப்படியே
செப்பினர் யாவுந் தெரிந்தநங் குருவும்.
ஏதோ வொருவன் சூதா ஏவிய
தூதால் வந்ததே யீதோ பெரும்போர் !

215.போர்புரிந் திடவரு புருடோத் தமனும்
வார்குழன் மனோன்மணி மாதும், நோக்கில்
நம்மிலு மெத்தனை நம்பிய அன்பர் !
இம்மென வொருமொழி யிசைத்திவர் தம்மை
ஒருவரை யொருவ ருணர்ந்திடப் பண்ணில்,

220.வெருவிய போரும் விளைதுய ரனைத்தும்
இருவர்தந் துக்கமு மெல்லா மேகும்.
இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க
அப்படி யொன்றும் அடிகளெண் ணாமல்
சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு

225.அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே.
சுருங்கை யிதற்குஞ் சொல்லிய துயர்க்கும்
நெருங்கிய பநதம் நினைத்தற் கென்னை?
ஒன்றுந் தோற்றுவ தன்றுஎன் றனக்கே,