| 260. | வேலை யெனதோ? உமதோ? விநோதம் ஏவிய வழியான் போவதே யல்லால் ஆவதென் என்னால்? ஆ ! ஆ ! நன்றே ! |
| சுந்தர, | | கருணா கரரே ! களைப்பற நீரிங்கு ஒருவா றுறங்கவென் றுன்னி யன்றோ |
| 265. | இவ்விட மனுப்பினோம்? என்னை சிறிதுஞ் செவ்விதில் தூங்கா திருந்தீர் ! சிச்சீ ! எத்தனை நாளா யினநீர் தூங்கி ! இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்? பன்னா ளிரவும் பகலு முழைத்தீர். |
| 270. | எந்நா ளாறுவீ ரிவ்வலுப் பினிமேல்? |
| கருணா. | | அடியேற் கலுப்பென்? அருளா லனைத்தும் முடிவது. மேலும், யான்வரும் வேளை யிட்டமாம் நிட்டா பரருந் தனியாய் நிட்டைவிட் டெழுந்தார். இருவரு மதனால் |
| 275. | ஏதோ சிலமொழி யோதிமற் றிருந்தோம். ஈதோ உதயமு மானதே. இனியென்? |
| சுந்தர, | | விடிந்த தன்றிது. வெள்ளியி னுதயம். படும், படும். மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள்பேச் சறிவோம். ஓயாப் பேச்சே ! |
| 280. | இங்கது முடியுமோ? ஏனுங் கட்குஞ் சமயிகட் காம்சச் சரவு? அமையு முங்கட் கவரவர் நிலையே. |
மூன்றாம் அங்கம் : 4-வது களம் முற்றிற்று. |
|
|
|