| | இயல்பிது வாயி னிரங்க லென்பயன்? |
| 25. | வயலுழு முழவோர் வருத்தமுங் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனந் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி யுலகிடை வாழா தோடுவ ரோபிறர்? அலகிலா மானிடர் யாவரு மவரவர் |
| 30. | நலமே யாண்டும் நாடுவர். மதிவலோர் களத்தொடு காலமுங் கண்டுமீ னுண்ணக் குளக்கரை யிருக்குங் கொக்கென அடங்கிச் சம்பவஞ் சங்கதி யென்பவை நோக்கி யிருப்பர் : நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர். |
| 35. | நண்ணா ரிதுபோல் நலமிலா ஐயம். எண்ணார் துணிந்தபின் ; பண்ணார் தாமதம். ஏழைய ரலரோ இரங்குவ ரிங்ஙனம்? கோழையர் ! எங்ஙனங் கூடுவார் இன்பம்? வந்தன னஃதோ மன்னனும். - |
| 40. | வந்தனம் வந்தன முன்றிரு வடிக்கே. | (க) | | | (நிலைமண்டில ஆசிரியப்பா) |
| ஜீவகன். | | குடிலா ! நமது குறைவிலாப் படைக ளடையவு மணிவகுத் தானவோ? |
| | நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென வுன்னினன். |
| குடில, | | அவர்க்கது முற்றும். |
| | இதக்கே டென்றனர். ஆயினும் போயினர். |
| படைகள். | | ஜயஜய ! ஜீவக வேந்த ! விஜயே ! |
| குடில, | | அதிர்கழல் வீரரு மாசரு மீதோ எதிர்பார்த் திருந்தன ரிறைவ!நின் வரவே. |
| 50. | நாற்றிசை தோறும் பாற்றினஞ் சுழல |
|
|
|