| | நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவே லேந்திக் கூற்றின்நா வென்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றா தலையும் |
| 55. | உறையுறு குறுவா ளொருபுற மசைத்துக் காற்றினு மிகவுங் கடுகிக் கூற்றின் பல்லினுங் கூரிய பகழி மல்கிய தூணி தோளில் தூக்கி, நாண் நின்று எழுமொலி யுருமுபொன் றெழுப்பி யார்த்தவர் |
| 60. | கடிபுரி காக்குநின் காற்படை யாளர். இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்குங் குரத்தாற் பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே. |
| 65. | நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டின மாற்ற மும்மதம் பொழியும் வாரணப் புயலினம் தத்தம் நிழலொடு கறுவி நிற்பது மழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய |
| 70. | புரந்தான் கைப்படாப் பொருப்புகள் போன்ற கொடிஞ்சி நெடுந்தே ரிருஞ்சிறை விரித்து “வம்மின் ! வம்மின் ! வீரரே ! நாமினி யிம்மெனு முன்னமவ் விந்திர லோகமுஞ் செல்லுவம் ! ஏறுமின் ! வெல்லுவம் !” எனப்பல |
| 75. | கொடிக்கரங் காட்டி யழைப்பதுங் காண்டி. - |
| ஜீவ, | | கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும். உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ ! ஓ ! |
| | வேற்படைத் தலைவரே ! நாற்படை யாளரே ! கேட்பீ ரொருசொல் ! கிளர்போர்க் கோலம் |
| 80. | நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ ! ஆ ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையி னரும்பயன் வாய்த்ததிங் குமக்கே ! |
|
|
|