பக்கம் எண் :

மனோன்மணீயம்
101

தாயினுஞ் சிறந்த தயைபூண் டிருந்ததும்
தயமாந் தேவிக்குத் தீவினை யிழைக்கத்
85.துணிந்தவிவ் வஞ்சரை யெணுந்தொறு மெணுந்தொறும்
அகந்தனி லடக்கியும் அடங்கா தெழுந்து,
புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய
நெடுந்திரட் புருவங் கொடுந்தொழில் குறிப்ப
வளங்கெழு மீசையுங் கிளர்ந்தெழுந் தாடக்
90.களங்கமில் நும்முகங் காட்டுமிச் சினத்தீ
கண்டுஅப் பாண்டியே கொண்டன ளுவகை.
அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின் !
முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா !

படைகள்.

தாம்பிர பன்னிக்கு ஜே ! ஜே !


ஜீவ,ஒருதுளி யேனுநீ ருண்டுளீ ராயின்
95.கருதுவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை.
“மக்காள் ! அருந்தி வளர்மின் ! நுமக்கு
மிக்கோ ரில்லா வீரமாய்ப் பரந்து
முதுசுதந் தரத்தின் முத்திரை யாகி,
இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக !
100.அன்னியன் கைப்படா விந்நீர் கற்பிற்கு
இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப்
பொழிகநீர் பொன்றிடு மளவும் !” என் றன்றோ
வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை
தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம்
105.பார்த்தா லார்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் !

படைகள்.

ஜே ! ஜே !


ஜீவ,விந்தம் அடக்கினேன் தந்தநற் றமிழ்மொழி
தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ?

படைகள்.

தமிழ்மொழிக்கு ஜே ! ஜே !


ஜீவ,பழையோர் பெருமையுங் கிழமையுங் கீர்த்தியும்
மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி
110. நித்திரை வரும்வகை யொத்தறுத் துமது